சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

நாமக்கல்

பிரதோஷம்

மோகனூர் பகுதியில் பிரதோஷத்தையொட்டி மணப்பள்ளி பீமேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உட்பட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்து விசேஷ பூஜை நடைபெற்றது.

அதேபோல் மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில் உள்ள நந்தி பகவானுக்கும், பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்து விசேஷ பூஜை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பரமேஸ்வர்

பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பங்குனி மாத பிரதோஷத்தையொட்டி நேற்று சிவன் மற்றும் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், அலங்காரமும் நடைபெற்றது. பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர்,

எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் மற்றும் கோப்பணம்பாளையம் பரமேஷ்வரர் உள்ளிட்ட கோவில்களில் உள்ள சிவபெருமானுக்கு பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பிரதோஷ விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story