சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

கரூர்

ஆவணி மாத கடைசி பிரதோஷத்தைெயாட்டி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பால், பன்னீர், தயிர், இளநீர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நந்தி பகவானுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தவுட்டுப்பாளையம் அருகே நன்செய் புகழூரில் உள்ள பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதேபோல் புன்னம் சத்திரம் அருகே உள்ள புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் உள்ள நந்தி பெருமான், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவிலில் உள்ள நந்தி பெருமான், காகிதபுரம் குடியிருப்பில் உள்ள காசி விஸ்வநாதர், தோட்டக்குறிச்சி சொக்கநாதர், மண்மங்கலம் மணிகண்டேஸ்வரர், நன்னீர் சவுந்திரநாயகி அம்மன், குந்தாணிபாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தோகைமலை அருகே உள்ள தொண்டமாங்கினம் ஆதி சிவன் சுயபேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தீஸ்வரருக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதேபோல் ஆர்.டி.மலை மீது அமைந்துள்ள விராச்சிலை ஈஸ்வரர் கோவில், தோகைமலை மார்க்கண்டேஸ்வரர், சின்ன ரெட்டிபட்டி ஆவுடைலிங்கேஸ்வரர், கழுகூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர், சிவாயம் சிவபுனீஸ்வரர், இடையபட்டி ரத்தினகிரீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷத்தைெயாட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.


Next Story