சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

கரூர்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பால், பன்னீர், தயிர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நந்தி பகவானுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் மகாதீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் நன்செய் புகழூரில் உள்ள மேகபாலீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு பிரதோஷத்தையொட்டி பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை ெபாருட்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல் வேலாயுதம்பாளையம் காகிதபுரம் குடியிருப்பில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் நந்தி பகவானுக்கு பிரதோஷத்தையொட்டி பால் உள்பட பல்வேறு வாசனை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

இதேபோல் தோகைமலை அருகே உள்ள விராச்சிலை ஈஸ்வரர் ேகாவிலில் நந்திபகவானுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story