கோவில்களில் பிரதோஷ வழிபாடு


கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 31 July 2023 12:15 AM IST (Updated: 31 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம், போடி பகுதிகளில் உள்ள கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

தேனி

பிரதோஷத்தையொட்டி நேற்று, பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி. அதிகார நாகராஜர், நந்திபகவானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள். இளநீர், தேன் உள்ளிட்ட 21 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மல்லிகைப்பூ, ரோஜாப்பூ, தாமரைப்பூ உள்ளிட்ட பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.

இதேபோல், போடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ கொண்டரங்கி மல்லையப்ப சுவாமி கோவிலில் சிவ பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு மஞ்சள் கயிறுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சுப்பிரமணிய சுவாமி கோவில், பிச்சாங்கரை கீழச்சொக்கநாதர் கோவில் மேலச்சொக்கநாதர் கோவில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், பரமசிவன் மலைக் கோவிலிலும் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

1 More update

Related Tags :
Next Story