சோளிங்கர் பகுதி கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சோளிங்கர் பகுதி கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

சோளிங்கர் பகுதி கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது,.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

சோளிங்கர் பகுதி கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது,.

சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள சகாதேவ சித்தர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜையில் மூலவர் சிவலிங்கத்திற்கும் நந்திபகவானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல் சோளிங்கர் பஜார் தெருவில் அமைந்துள்ள சோழபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மூலவர் சோழபுரீஸ்வரர், நந்தி பகவானுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு பூஜை அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது,

கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் கோவிலில் கைலாசநாதர் சுவாமி, நந்திபகவானுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story