ஜனாதிபதி தேர்தல்: பிபிஇ கிட் அணிந்து வந்து வாக்களித்தார் அமைச்சர் நாசர்..!


ஜனாதிபதி தேர்தல்: பிபிஇ கிட் அணிந்து வந்து வாக்களித்தார் அமைச்சர் நாசர்..!
x

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் நாசர் பிபிஇ கிட் அணிந்து வந்து தன்னுடைய வாக்கைச் செலுத்தினார்.

சென்னை,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (பா.ஜ.க கூட்டணி) வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வாக்குசீட்டு முறையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய உள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைமை செயலகத்தில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக, சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டசபை குழு கூட்ட அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலையிலே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய வாக்கை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து மாநில அமைச்சர்களும் வாக்களித்தனர்.

இந்த நிலையில் தற்போது அமைச்சர் நாசர் சென்னை தலைமைச் செயலகத்தில் ஜனாதிபதி தேர்தலில் தன்னுடைய வாக்கைச் செலுத்தினார். அமைச்சர் நாசர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிபிஇ கிட் அணிந்து வந்து வாக்களித்தார்.


Next Story