இளம் சாதனையாளர்களுக்கு பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை


இளம் சாதனையாளர்களுக்கு பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை
x

இளம் சாதனையாளர்களுக்கு பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 9 மற்றும் பிளஸ்-1 பயின்று வரும் 3,093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இத்திட்டத்தின் கீழ் 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் எனவும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் எனவும் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட https://scholarships.gov.in என்ற இணையதளத்திலும் மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் http://socialjustice.gov.in என்ற இணையதளத்திலும் பார்வையிட்டு கல்வி உதவித்தொகை பயன்களை பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story