கைதி சாவு

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கைதி இறந்தார்
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 73). இவரை பசுவந்தனை போலீசார் கடந்த மே மாதம் போக்சோ சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிர் இழந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை சிறை ஜெயிலர் வினோத் கொடுத்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





