கடலூர் சிறையில் கைதி திடீர் சாவு


கடலூர் சிறையில் கைதி திடீர் சாவு
x
தினத்தந்தி 7 Jun 2023 6:45 PM GMT (Updated: 8 Jun 2023 6:12 AM GMT)

கடலூர் சிறையில் கைதி திடீரென இறந்தார்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூர் அருகே கேப்பர்மலையில் உள்ள மத்திய சிறைச்சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கொடியனூர் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் வெள்ளையன் (வயது 47) என்பவர் சாராய வழக்கு ஒன்றில் கடந்த மாதம் 16-ந்தேதி அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை 5.40 மணிக்கு வெள்ளையனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து சிறை காவலர்கள், உடனே வெள்ளையனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு வெள்ளையனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story