தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x

அரக்கோணத்தில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

அரக்கோணம் காமராஜ் நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 35). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சாந்தி வேலைக்கு செல்வதால் குழந்தையை பார்த்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுவதால் சாந்தியை வேலைக்கு போக வேண்டாம் என்று மோகன்ராஜ் கூறி வந்துள்ளார். ஆனால் சாந்தி தொடர்ந்த வேலைக்கு சென்றதால் கணவன்- மனைவி இடையே அவ்வபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மோகன்ராஜ் மன உழைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் மீண்டும் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டதில் மோகன்ராஜ் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அரக்கோணம் டவுன் போலீசார், மோகன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story