தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை


தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
x

கோவை அருகே தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்புத்தூர்


கோவை மலுமிச்சம்பட்டி உடையார் வீதியை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 33). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காவியா (27) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முத்துகுமாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்கு அவர் சிகிச்சை எடுத்து கொண்ட போதிலும் குணமாகவில்லை.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் கடந்த 23-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருமணமான 8 மாதத்தில் புதுமாப்பிள்ளை 2 மாத கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story