தனியார் நிறுவன ஊழியர் படுகாயம்


தனியார் நிறுவன ஊழியர் படுகாயம்
x
தினத்தந்தி 21 Aug 2023 2:15 AM IST (Updated: 21 Aug 2023 2:16 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிறுவன ஊழியர் படுகாயம்

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே சொக்கனூரில் உள்ள சட்டக்கல்புதூரை சேர்ந்தவர் பிரதீப்குமார்(வயது 30). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் பிரதீப்குமார் சம்பவத்தன்று கிணத்துக்கடவுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் அங்குள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்துவிட்டு, வீடு திரும்பி கொண்டு இருந்தார். சிங்கயன்புதூர் அய்யப்பன் கோவில் அருகே வந்தபோது, முன்னால் சென்ற டிராக்டர் எந்தவி சிக்னலும் காட்டாமல் திடீரென திரும்பியதால், அதன் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பிரதீப்குமார் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் டிராக்டரை ஓட்டி வந்த சதீஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story