தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை


தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
x

சேலத்தில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

சேலம் அழகாபுரம் பெரியசாமி நகரை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 41). பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர், சேலத்தை சேர்ந்த பலரிடம் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.35 லட்சம் அளவுக்கு கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர்.

இதனிடையே நேற்று முன்தினம் அஸ்தம்பட்டி சாரதா கல்லூரி சாலையில் தனியார் ஓட்டல் அறையில் அரவிந்தன் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடன் தொல்லையால் அரவிந்தன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story