மரக்காணம் கடலில் குதித்துதனியார் நிறுவன ஊழியர் தற்கொலை


மரக்காணம் கடலில் குதித்துதனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 7 Feb 2023 6:45 PM GMT (Updated: 7 Feb 2023 6:47 PM GMT)

மரக்காணம் கடலில் குதித்து தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

விழுப்புரம்

மரக்காணம்,

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் (வயது 38). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்ற வினோத் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் மரக்காணம் தீர்த்தவாரி கடலில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே மரக்காணம் போலீசார் அங்கு சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடற்கரையில் கேட்பாரற்று நின்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றி அதில் இருந்த ஆதார் கார்டு மூலம் விசாரித்தனர். விசாரணையில் கடற்கரையில் பிணமாக கிடந்தவர் நெம்மேலி கிராமத்தை சேர்ந்த வினோத் என்பது தெரியவந்தது. அவர் குடும்ப பிரச்சினை காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை காரணமாகவோ கடலில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story