விழுப்புரம் அருகேதனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை


விழுப்புரம் அருகேதனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 14 Feb 2023 6:45 PM GMT (Updated: 14 Feb 2023 6:45 PM GMT)

விழுப்புரம் அருகே தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

விழுப்புரம்


விழுப்புரம் அருகே உள்ள தனசிங்குபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரவேல்(வயது 40). புதுச்சேரி சேதராப்பட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வந்த இவருக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் ஆகியோர் உள்ளனர்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையான குமரவேல் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அவ்வப்போது சிகிச்சைக்கு சென்று வந்தார். இதனால் கடந்த சில நாட்களாக அவர் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டு வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம்குடித்து மயங்கி விழுந்த குமரவேலுவை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story