திருமணம் ஆகாத விரக்தியில்தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை


திருமணம் ஆகாத விரக்தியில்தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 14 March 2023 6:45 PM GMT (Updated: 14 March 2023 6:45 PM GMT)

திருமணம் ஆகாத விரக்தியில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம்

வளவனூர்,

விழுப்புரம் அருகே உள்ள வடவாம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் சீனிவாசன் (வயது 26). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. இதனால் இவர் தினமும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று சீனிவாசன், திடீரென வாந்தி எடுத்துள்ளார். உடனே அவரிடம் பெற்றோர் கேட்டதற்கு எரும்பு மருந்து சாப்பிட்டதாக கூறினார். உடனே அவர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story