தனியார் வேலைவாய்ப்பு முகாம்

நெல்லையில், நாளை மறுநாள் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு- தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெறுகிறது.அன்று காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை முகாம் நடைபெறுகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
முகாமில் 5-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ மற்றும் கணினி பயிற்சி கல்வி தகுதி உடைய அனைவரும் பங்கேற்கலாம். முகாமில் கலந்துகொள்ளும் இளைஞர்கள், இளம்பெண்கள் சுயதொழில் செய்வதற்கு ஏற்ப கடன் உதவிகள் வழங்கும் நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன.
முகாமில் பங்கேற்க விரும்புவோர் தங்களது சுய விவரம், கல்வி சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலுடன் பங்கேற்கலாம். மேலும் முகாமில் கலந்து கொள்வோர் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பான மேலும் தகவல்களை பெற NELLAI EMPLOYMENT OFFICE என்ற Telegram channel-ல் இணைந்து பயன் பெறலாம்.
இந்த தகவலை, மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.






