மேட்டூர் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் ஆம்னி பஸ் - 8 பேர் காயம்


மேட்டூர் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் ஆம்னி பஸ் - 8 பேர் காயம்
x

மேட்டூர் அடுத்த சாம்பள்ளி பகுதியில் தனியார் ஆம்னி பஸ் திடீரென தீப்பற்றி எரிந்தது.

மேட்டூர்,

கோவையில் இருந்து பெங்களூர் நோக்கி வந்த ஒரு ஆம்னி பேருந்து நள்ளிரவு ஒரு மணி சுமார் 1 மணி அளவில் மேட்டூர் அடுத்த புது சாம்பள்ளி பகுதியை கடக்கும் பொழுது திடீரென அந்த பேருந்தில் தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென பஸ் முழுவதும் பரவியது.

இதனை அறிந்து பஸ்ஸில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக கீழே இறங்கினார்கள். இருப்பினும் 8 பேருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. இவர்கள் உடனடியாக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் கோவையை சேர்ந்த தாமோதரன் (வயசு 38), தாமோதரன் மனைவி வினோதினி (30), சந்தோஷ் (28) உட்பட 10 பேர் மேட்டூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மற்ற பயணிகள் தீக்காயம் இன்றி தப்பினார்கள். தகவல் அறிந்தவுடன் மேட்டூர் தீயணைப்பு துறை வீரரகள் மற்றும் கருமலைக்கூடல் போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது


Next Story