மகிமைபுரத்தில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்


மகிமைபுரத்தில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்
x

தனியார் வேலை வாய்ப்பு முகாம் மகிமைபுரத்தில் நாளை நடக்கிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) மகிமைபுரத்தில் உள்ள மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் அரியலூர் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் உள்ள முன்னணி தனியார் துறை நிறுவனங்களும் பங்கேற்று தங்களது நிறுவனத்திற்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். 18 வயது முதல் 35 வயது வரையிலான 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். மேலும், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு தேவையான திறன் பயிற்சியினை பெறுவது தொடர்பாக தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்குவதற்கும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு பெறுவது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் ஆலோசனைகள் மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான உதவிகள் பெறுவதற்காக மாதிரி வேலைவாய்ப்பு அலுவலகம் என தனித்தனி அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. எனவே தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் மேற்கண்ட தகுதிகளையுடைய வேலைநாடுனர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதி குறித்த விவரங்களை பதிவு செய்து இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 04329-228641 என்ற தொலைபேசி எண்ணையோ அல்லது 9499055914 என்ற செல்போன் எண்ணையோ தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story