26-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


26-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
x

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 26-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

கரூர்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் கரூர் மாவட்ட மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) தாந்தோன்றிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளனர். இம்முகாமில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள், தையற்பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம்.

இந்த முகாம் முற்றிலும் இலவசமானது. வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய சுய விவர குறிப்பு, உரிய கல்விச்சான்றுகள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://forms.gle/yaGNSYxNKEHaYCob8, என்ற கூகுள் லிங்கில் அல்லது www.tnprivatejobs.tn.gov என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். வேலையளிப்போரும் மற்றும் வேலை நாடுனர்களும் முகாம் தொடர்பான விவரங்களுக்கு 9789123085 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story