செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது


செங்கல்பட்டு மாவட்டத்தில்  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்  நாளை நடக்கிறது
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துடன் இணைந்து நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2. மணி வரை மறைமலைநகர் அடிகளார் சமுதாய கூடம், ஜெ.ஆர்.கே மேல்நிலைப்பள்ளி அருகில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை, நேர்முகத்தேர்வினை நடத்தி தேர்வு செய்ய உள்ளார்கள். 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, பி.இ., ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள், நர்சுகள். மருந்தாளுனர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் நேரில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இதில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது எனவும் அதில் கூறப்பட்டிருந்தது.


Next Story