செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x

விருத்தாசலத்தில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் ஞானசம்பந்தம் பள்ளியில் திருமால் செஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி 2 நாட்கள் நடந்தது. இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட செஸ் அசோசியேஷன் தலைவர் சேகர் தலைமை தாங்கினார். ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் ரமேஷ் சந்த், அரிமா சங்கம் சபாநாதன், பள்ளி தாளாளர் அருணாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருமால் செஸ் அகாடமி நிறுவனர் சீமான் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், கழுதூர் வெங்கடேஸ்வரா கல்லூரி தாளாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர். இதில், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story