கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு


கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
x

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை

அன்னவாசல்:

இலுப்பூரில் கிரிக்கெட் போட்டி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் அன்னவாசல், இலுப்பூர், கீரனூர் உள்ளிட்ட புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசை வடமலப்பூர் அணியும், 2-வது பரிசை இலுப்பூர் அணியும், 3-வது பரிசை இலுப்பூர் அணியும், 4-வது பரிசை உடையாண்டிபட்டி அணியும் பெற்றன. பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரர்களுக்கும் பரிசுகள் மற்றும் ரொக்கபணம் வழங்கப்பட்டன. இந்த போட்டியை இலுப்பூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story