கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு


கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
x

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை

காரையூர் அருகே உள்ள வையாபுரி நவகுடியில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டன. இதில் முதல் பரிசை கே.அம்மாபட்டி அணியினரும், 2-ம் பரிசை சேர்வைகாரன்பட்டி அணியினரும், 3-ம் பரிசை வையாபுரி அணியினரும், 4-ம் பரிசை சாத்தனூர் அணியினரும் பெற்றனர்.

பின்னர் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசுகள் மற்றும் சிறந்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் அரசமலை ஒன்றிய கவுன்சிலர் முருகேசன் மற்றும் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியை அரசமலை, காரையூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.


Next Story