கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு


கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
x

கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை

இலுப்பூர் அருகே உள்ள மலைக்குடிபட்டியில் கபடி போட்டி கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடந்தது. இதில் முதல் பரிசை ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், 2-வது பரிசை லால்குடி கபடிக்குழு அணியும், 3-வது பரிசை சங்கராபுரம் அணியும், 4-வது பரிசை மெய்யகவுண்டன்பட்டி அணியும் பெற்றன. பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரர்களுக்கும் ரொக்கப்பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டன. கபடி போட்டியை இலுப்பூர் சுற்று வட்டாரத்தில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர்.


Next Story