கிரிக்கெட் போட்டியில்வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு


கிரிக்கெட் போட்டியில்வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
x

கிரிக்கெட் போட்டியில்வெற்றி பெற்ற அணிகளுக்கு சபாநாயகா் அப்பாவு பரிசு வழங்கினார்.

திருநெல்வேலி

பணகுடி:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பணகுடியை அடுத்த ரோஸ்மியாபுரத்தில் இளைஞர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து கிரிக்கெட் போட்டியை நடத்தினர். இதில் பல்வேறு அணிகள் கலந்து ெகாண்டன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, பணகுடி நகர செயலாளர் தமிழ்வாணன், பணகுடி பேரூராட்சி துணை தலைவர் சகாய புஷ்பராஜ், பேரூராட்சி உறுப்பினர்கள் கோபிகோபாலகண்ணன், ஜெயராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story