பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு பதவி உயர்வு


பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு பதவி உயர்வு
x

30-ந்தேதியுடன் ஓய்வு பெறவுள்ள பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்த பாண்டியனை பதவி உயர்வாக சென்னை சிறப்பு பிரிவு குற்றப்பிரிவின் சி.ஐ.டி.-1-க்கு போலீஸ் சூப்பிரண்டாக நியமித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்ற பாண்டியன் வருகிற 30-ந்தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டியனின் சொந்த ஊர் தேனி மாவட்டம், பெரியகுளம் ஆகும். மேலும் அவர் கவிஞர் வைரமுத்துவின் சகோதரர் உறவு முறை ஆவார்.

1 More update

Next Story