தந்தை, மகனை தாக்கிய 17 பேர் மீது வழக்கு


தந்தை, மகனை தாக்கிய 17 பேர் மீது வழக்கு
x

நெல்லை அருகே தந்தை, மகனை தாக்கிய 17 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருநெல்வேலி

தூத்துக்குடி மாவட்டம் விட்டிலாபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 24). சம்பவத்தன்று 2 பேரும் நெல்லை அருகே தெற்கு வெட்டியபந்தியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனர். அப்போது அந்த பகுதியில் சிலர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதை வேல்முருகன், சதீஷ்குமார் ஆகியோர் கண்டித்தனர். இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர்கள், 2 பேரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவந்திபட்டி போலீசார் விசாரணை நடத்தி, தூத்துக்குடி மாவட்டம் நாட்டார்குளத்தை சேர்ந்த வினித், தங்கபாண்டி, வினிஸ், பாலா, சிபிராஜ், ஆகாஷ், நாதன் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனா்.


Next Story