நாமக்கல்லில்ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்


தினத்தந்தி 1 Sep 2023 7:00 PM GMT (Updated: 1 Sep 2023 7:00 PM GMT)
நாமக்கல்

எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மாதேஷ், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். ஆன்லைன் தேர்வு முறைகளை கைவிட வேண்டும். காலை உணவு திட்டத்தை நடுநிலை மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன மேலும் எண்ணும் எழுத்தும் திட்டத்தால் தொடக்கக்கல்வி மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.


Next Story