எருமப்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


எருமப்பட்டியில்  காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

எருமப்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்

எருமப்பட்டி:

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது அமலாக்க துறை அத்துமீறி தொடர்ந்து விசாரணை செய்ததை கண்டித்து எருமப்பட்டி பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார காங்கிரஸ் தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார். பேரூர் தலைவர் செல்வசேகரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் முன்னாள் ஊராட்சி குழு தலைவர் பத்மாவதி, மோகன்தாஸ், கருணாநிதி, கன்னியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story