பழனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பழனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

பழனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், பழனி வேல் ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் பாவேந்தன் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் கனியமுதன், மாவட்ட செய்தி தொடர்பாளர் பொதினிவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கணக்கன்பட்டி உச்சி காளியம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் சென்று வழிபட உரிமை வழங்க வேண்டும். ஆயக்குடி டி.கே.என்.புதூரில் சாதிய வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெத்தநாயக்கன்பட்டி தூய்மை பணியாளர் அன்னம்மாள் கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story