நாமக்கல்லில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 May 2023 7:00 PM GMT (Updated: 29 May 2023 7:00 PM GMT)
நாமக்கல்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிகொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டியை சத்துணவு திட்டத்துடன் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கோமதி தலைமை தாங்கினார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story