குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து பெண்கள் மறியல்


குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து பெண்கள் மறியல்
x

ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விருத்தாச்சலம்-கும்பகோணம் வரை சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கல்லாத்தூர் மெயின் ரோட்டு தெருவில் உள்ள குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த சில மாதங்களாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதையடுத்து அப்பகுதி பெண்கள் தொலைதூரம் சென்று குடங்களில் தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story