காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x

குடியாத்தத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர்

ராகுல்காந்தியை ராவணனோடு ஒப்பிட்டதை கண்டித்து குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் மத்திய மாவட்ட தலைவர் ஜி.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். குடியாத்தம் நகர தலைவர் விஜயன், ஒன்றிய தலைவர்கள் வீராங்கன், சங்கர், பெரியசாமி, தனசேகர், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் கிருஷ்ணவேணி, மாவட்ட இளைஞரணி தலைவர் விக்ரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் கிருபானந்தம் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் ராகுல்காந்தியை இழிவு படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் தலைவர்களை கண்டித்து கோஷமிட்டனர். இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story