மீன்துறை டோக்கன் அலுவலகத்தில் மீனவர்கள் முற்றுகை


மீன்துறை டோக்கன் அலுவலகத்தில் மீனவர்கள் முற்றுகை
x

மீன்துறை டோக்கன் அலுவலகத்தில் மீனவர்கள் முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் துறைமுக பகுதியில் உள்ள மீன் துறை டோக்கன் அலுவலகம் முன்பு நேற்று ஏராளமான மீனவர்கள் முற்றுகையிட்டனர். 18 பைபர் படகுகளுக்கு மட்டும் மீன்பிடிக்க அனுமதி வழங்கி உள்ள நிலையில் 4 பைபர் படகுகளுக்கு மட்டும் அனுமதி வழங்காத மீன்துறை அதிகாரிகளை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்திய மீனவர்களுடன் மீன் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து போராட்டம் நடத்திய மீனவர்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.


Next Story