தூத்துக்குடியில் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம்


தினத்தந்தி 30 Aug 2023 12:15 AM IST (Updated: 30 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

தூத்துக்குடி

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சார்பில் வருங்கால வைப்பு நிதி விழிப்புணர்வு மற்றும் குறைதீர்க்கும் முகாம் தூத்துக்குடி துறைமுக தொழிலாளர் சங்க அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. முகாமில் வைப்புநிதி உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்கள், நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். ஓய்வூதியம் சம்பந்தமாக விளக்கம் அளிக்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை மாவட்ட வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையர் ஷாஜி வழிகாட்டுதலின்படி திட்டக்குழு அதிகாரி கோமதி சுந்தரவேல், செல்லப்பா, ராஜசேகரன், பாலமுருகன் ஆகியோர் செய்து இருந்தனர்.

1 More update

Next Story