சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் வருங்கால வைப்பு நிதி சிறப்பு முகாம்


சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் வருங்கால வைப்பு நிதி சிறப்பு முகாம்
x

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சார்பில் ‘வைப்பு நிதி உங்கள் அருகில்' எனும் சிறப்பு முகாம் வருகிற 28-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை சென்னை, வேலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

சென்னை,

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சார்பில் 'வைப்பு நிதி உங்கள் அருகில்' எனும் சிறப்பு முகாம் வருகிற 28-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை சென்னை, வேலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

சென்னை மாவட்டத்தை பொறுத்தமட்டில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய அலுவலக வளாகத்தில் இந்த முகாம் நடக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு கும்மிடிப்பூண்டி சின்ன ஓபுலாபுரம் ஜி.என்.டி. சாலையில் உள்ள ஷரோன் பிளை எனும் நிறுவன வளாகத்திலும், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு மறைமலைநகர் யூகால் பியூல் சிஸ்டெம்ஸ் லிமிடெட் அலுவலகத்திலும், காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு மணிமங்கலம் முடிச்சூர் சாலையில் உள்ள டி.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் முகாம் நடைபெறுகிறது.

அதேபோன்று வேலூர் மாவட்டத்துக்கு காட்பாடி குடியாத்தம் சாலையில் உள்ள குளுனி கான்வென்டிலும், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வந்தவாசி அகஸ்தியா மெட்ரிக் பள்ளியிலும், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு கலவாய் ஜி.பி.நகர் ஆதிபராசக்தி என்ஜினீயரிங் கல்லூரியிலும், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு ஆம்பூர் பிளெஸ்ஸோ மெட்ரிக் பள்ளியிலும் நடக்கிறது.

புதுச்சேரி மாவட்டத்துக்கு பக்கமுடியான்பேட்டை இன்டெக்ரா சாப்ட்வேர் நிறுவனத்திலும், காரைக்கால் மாவட்டத்துக்கு காரைக்கால் காமராஜர் சாலையில் உள்ள இ.எஸ்.ஐ. கார்ப்பரேசன் கிளை அலுவலகத்திலும் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் முகாமில் பங்கேற்று தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம்.

மேற்கண்ட தகவலை சென்னை வருங்கால வைப்பு நிதி ஆணையர் ஆண்ட்ரூ பிரபு தெரிவித்துள்ளார்.


Next Story