விழுப்புரம் மாவட்டத்தில்பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட்டது


விழுப்புரம் மாவட்டத்தில்பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 12 May 2023 6:45 PM GMT (Updated: 12 May 2023 6:46 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 முடித்த மாணவ- மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட்டது.

விழுப்புரம்


தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந் தேதி வரை நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டது.

இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 189 பள்ளிகளில் இருந்து 10,762 மாணவர்களும், 10,804 மாணவிகளும் என மொத்தம் 21,566 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதியதில் 9,366 மாணவர்களும், 10,186 மாணவிகளும் என மொத்தம் 19,552 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

மதிப்பெண் சான்றிதழ்

இவர்கள் அனைவரும் கல்லூரி படிப்பிற்கு எந்தவித சிரமமும் இன்றி முன்கூட்டியே விண்ணப்பிக்க ஏதுவாக கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் பிளஸ்-2 முடித்த மாணவ- மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நேற்று முதல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பிளஸ்-2 முடித்த மாணவ- மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்காக மாணவ- மாணவிகள் அனைவரும் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரில் சென்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றனர். சில மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோருடன் பள்ளிக்கு வந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுச்சென்றனர். விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 முடித்த மாணவிகள் ஆர்வமுடன் வந்து மதிப்பெண் சான்றிதழை பெற்றுச்சென்றனர்.


Next Story