டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகை
சேலம்
பெத்தநாயக்கன்பாளையம்:-
கருமந்துறை போலீஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதனால் மதுப்பிரியர்கள் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை கேலி கிண்டல் செய்வதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த பகுதி பொதுமக்கள் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, நேற்று கடையை முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள் கடை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களுடன் பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் அன்புச்செழியன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
Related Tags :
Next Story