பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் கூட்டம்; 13-ந்தேதி நடக்கிறது


பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் கூட்டம்; 13-ந்தேதி நடக்கிறது
x

பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் கூட்டம் 13-ந்தேதி நடக்கிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம், வருகிற 13-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தை, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்துவார்கள். இக்கூட்டத்தில், கூட்டுறவுத் துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். மேலும், கூட்டம் நடத்தப்படுவதை மேற்பார்வை செய்திட அரியலூர் வட்டம், இலந்தைக்கூடம் கிராமத்திற்கு துணை பதிவாளர்(பொது வினியோக திட்டம்), உடையார்பாளையம் வட்டம், அங்கராயன்நல்லூர் (கிழக்கு) கிராமத்திற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், செந்துறை வட்டம், கிளிமங்களம் கிராமத்திற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர், ஆண்டிமடம் வட்டம், காட்டாத்தூர் (வடக்கு) கிராமத்திற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ஆகியோர் மேற்பார்வை அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

எனவே இக்கூட்டத்தில், பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோருக்கு அங்கீகாரச் சான்று வழங்குதல், குடும்ப தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்பத் தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019-ன் படி பயன்பெறலாம் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.


Next Story