பொது வினியோகத்திட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்


பொது வினியோகத்திட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 4 July 2023 6:45 PM GMT (Updated: 5 July 2023 11:15 AM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் பொது வினியோகத்திட்ட குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 8-ந்தேதி நடக்கிறது என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

திருவாரூர்

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் பொது வினியோகத்திட்ட குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 8-ந்தேதி நடக்கிறது என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில், பொது வினியோக திட்டத்தினை மேம்படுத்திடும் வகையில் பொது வினியோகத் திட்ட சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது. இந்த கூட்டமானது, திருவாரூர் தாலுகா தேவர்கண்டநல்லூர் கிராமத்தில், திருவாரூர் வருவாய்க் கோட்ட அலுவலர் தலைமையிலும், நன்னிலம் தாலுகா கீழ்க்குடிகிராமத்தில் திருவாரூர் கூட்டுறவுசங்கங்கள் இணைப்பதிவாளர் தலைமையிலும் நடக்கிறது.

மேலும் குடவாசல் தாலுகா திருக்களம்பூர் கிராமத்தில் திருவாரூர் சரக துணைப்பதிவாளர் தலைமையிலும், வலங்கைமான் தாலுகா தொழூவூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் முதுநிலை மண்டல மேலாளர் தலைமையிலும், மன்னார்குடி தாலுகா கோட்டூர் கிராமத்தில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், நீடாமங்கலம் தாலுகா, கப்பலுடையான் கிராமத்தில் திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குனர் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி தாலுகா கச்சனம் கிராமத்தில் மன்னார்குடி சரக துணைப்பதிவாளர் தலைமையிலும் நடக்கிறது.

பொதுவினியோகத்திட்டம்

கூத்தாநல்லூர் தாலுகா காவனூர் கிராமத்தில் திருவாரூர் மாவட்டவழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், முத்துப்பேட்டை தாலுகா, மேலநம்மன்குறிச்சி கிராமத்தில் திருவாரூர் பொதுவினியோகத்திட்ட துணைப்பதிவாளர் தலைமையிலும், அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் நடக்கிறது.

எனவே, மேற்கண் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள் மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்ய மனு அளித்துபயன்பெறலாம்.

அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்கள் போன்றவை குறித்த கோரிக்கை மனுக்களை கொடுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story