பொது வினியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம்; இன்று நடக்கிறது


பொது வினியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம்; இன்று நடக்கிறது
x

பொது வினியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும் சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. முகாம் நடைபெறும் இடங்கள், கிராமங்கள் விவரம் வருமாறு:- அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் வட்டாரத்திற்கு இலுப்பையூர், உடையார்பாளையம் வட்டாரத்திற்கு காரைக்குறிச்சி, செந்துறை வட்டாரத்திற்கு தளவாய் (வடக்கு), ஆண்டிமடம் வட்டாரத்திற்கு இடையக்குறிச்சி ஆகிய 4 கிராமங்களில் நடக்கிறது. இதேபோன்று பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு செங்குணம், வேப்பந்தட்டை வட்டாரத்திற்கு வெங்கலம், குன்னம் வட்டாரத்திற்கு பெருமத்தூர் (வடக்கு), ஆலத்தூர் வட்டாரத்திற்கு காரை ஆகிய 4 கிராமங்களில் நடக்கிறது.

கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோருக்கு அங்கீகார சான்று வழங்குதல், குடும்ப தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம். இந்த தகவல் அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.


Next Story