செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்


செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்
x

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

செங்கல்பட்டு

மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனை பட்டா, குடிநீர், சாலை வசதி, முதியோர், விதவை உதவித்தொகை, போக்குவரத்து வசதி உள்ளிட்ட 274 மனுக்களை பெற்று அதனை துறை ரீதியாக அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவேல்ராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), அறிவுடைநம்பி, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் வெற்றி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story