செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்


செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
x

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு

கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 234 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் நிதி உதவி ரூ.20 ஆயிரம், அடிப்படை பணி ஒரு நபருக்கும், வருவாய்த்துறை சார்பில் 3 நபர்களுக்கு கருணை அடிப்படை பணி நியமன ஆணையையும் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அறிவுடைநம்பி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் லலிதா, மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story