கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு


கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு
x

கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.

கரூர்

அரவக்குறிச்சி

அரவக்குறிச்சியில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. இதில் பெரியமஞ்சுவெளி கிராமத்திற்குட்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில், பெரியமஞ்சுவெளி கிராமத்திற்குட்பட்ட செம்பாரைப்பட்டியில் புதிதாக கல் குவாரி மற்றும் எம்.சாண்ட் ஆலை அமைக்க ஒரு தனியார் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. இந்த கல் குவாரி அமைந்தால், பெரிய மஞ்சுவெளி கிராமத்திற்குட்பட்ட அழகம்பட்டி ,நடுப்பட்டி, வெள்ளையன்பட்டி, செம்பாறைப்பட்டி பகுதிகளில் விவசாயம் மற்றும் நீர் நிலைகள் பாதிப்படைந்து, மக்களின் உடல் நிலையும் பாதிக்கப்படும், எனவே கல் குவாரி அமைக்க அனுமதி வழங்க கூடாது, இது தொடர்பாக ஏற்கனவே மாவட்ட கலெக்டருக்கும், வருவாய் துறையினருக்கும் மனு அளித்து உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்று கொண்ட சிறப்பு அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.


Next Story