ஏரியூர் அருகே சுடுகாட்டில் சவக்குழிகள் மீது சாலை அமைத்ததால் பொதுமக்கள் போராட்டம்

ஏரியூர்
ஏரியூர் அருகே உள்ள ராமகொண்டஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட புதுச்சாம்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட வசித்து வருகின்றனர். இந்த ஊருக்காக ஒதுக்கப்பட்டுள்ள சுடுகாட்டிற்கு, சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது சாலையோரம் இருந்த சுடுகாட்டில், சவக்குழிகளை தோண்டி அதில் இருந்த எழும்புகூடுகளை மேலே போட்டதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் தங்களது பெற்றோர்களின் சவக்குழிகள், காணாமல் போனதாக கூறி கதறி அழுதனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





