விருத்தாசலத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


விருத்தாசலத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 April 2023 6:45 PM GMT (Updated: 3 April 2023 6:45 PM GMT)

விருத்தாசலத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள மேல தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக குடிநீர் வசதி செய்து தரவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் அப்பகுதியில் சாலை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் தலைமையில் நேற்று விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் அசோகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். பின்னர் அவர்கள் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலக அதிகாாிகளை சந்தித்து மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story