அறநிலைய துறை அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் பொதுமக்கள் போராட்டம்


அறநிலைய துறை அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் பொதுமக்கள் போராட்டம்
x

கோவில் திருவிழாவில் வசூலான பணத்தை வங்கியில் செலுத்தக்கூறிய ஊராட்சி தலைவருக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

கோவில் திருவிழாவில் வசூலான பணத்தை வங்கியில் செலுத்தக்கூறிய ஊராட்சி தலைவருக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில் திருவிழா

ஆரணி அருகில் உள்ள அம்மாபாளையத்தில் அம்மன் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவிழா நடைபெற்றது.

இந்த நிலையில் கோவில் நிர்வாக செலவு போக மீதமுள்ள லட்சக்கணக்கான ரூபாயை ஒருசிலர் அவர்கள் வசம் வைத்து உள்ளதால் அதனை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் முதலீடு செய்ய வேண்டும் என்று அவர்களிடம் அம்மாபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

ஆத்திரம் அடைந்த அவர்கள் ஊராட்சி தலைவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து திருவண்ணாமலை காந்தி நகரின் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பல முறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

குழந்தைகளுடன் போராட்டம்

இந்த நிலையில் நேற்று ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த பொதுமக்கள் குழந்தைகளுடன் வந்து திருவண்ணாமலை காந்தி நகரின் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீசார் மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து இருதரப்பினரையும் அழைத்து ஆரணி உதவி கலெக்டர் முன்னிலையில் அமைதி கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இருப்பினும் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று மாலை வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.



Next Story