மக்கள் தொடர்பு முகாம்


மக்கள் தொடர்பு முகாம்
x
தினத்தந்தி 11 Oct 2022 6:45 PM GMT (Updated: 11 Oct 2022 6:46 PM GMT)

திருப்புங்கூரில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது

மயிலாடுதுறை
சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


சீர்காழி அருகே திருப்புங்கூர் சிவலோக நாதனார் கோவில் வளாகத்தில் மக்கள் தொடர்பு முகாம் இன்று(புதன்கிழமை) நடக்கிறது. முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை தாங்குகிறார். இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு வீட்டு மனைபட்டா, குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story