மக்கள் தொடர்பு திட்ட முகாம்


மக்கள் தொடர்பு திட்ட முகாம்
x

ஆலங்குளம் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம் அருகே உள்ள கீழாண்மறைநாடு கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன், கீழாண்மறைநாடு ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 575 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் வெம்பக்கோட்டை தாலுகாவில் உள்ள அனைத்து கிராம மக்களும் கலந்து கொண்டனர். முகாமில் திட்ட அலுவலர் தண்டாயுதபாணி, சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா, வெம்பக்கோட்டை தாசில்தார் ரெங்கநாதன், தனி தாசில்தார் ராமசுப்பிரமணியம். வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சத்தியவதி, செல்வராஜ், மண்டல துணை தாசில்தார் அகதீஸ்வரன், ஆலங்குளம் கால்நடை மருத்துவர் டாக்டர் கார்த்திகா, வெம்பக்கோட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் எதிர்கோட்டை ஜெயபாண்டியன், ஏழாயிரம்பண்ணை கிருஷ்ணகுமார், வெம்பக்கோட்டை ஒன்றிய, ம.தி.மு.க.செயலாளர் ரவிசங்கர், ஆலங்குளம் வருவாய் ஆய்வாளர் அறிவழகன், கீழாண்மறைநாடு கிராம நிர்வாக அதிகாரி பொற்கொடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story